.

------------------------------------------------------
<விறகில் தீ இருப்பதை உணர்ந்தவன் ஞானி. அதில் தீ மூட்டி உணவு சமைத்து சாப்பிட்டவன் விஞ்ஞானி. >>>>> உன் மனம் உலகத்திலேயே உழன்று கொண்டிருக்கும்போது, எல்லாம் ஈஸ்வரனே என்று வாயால் மாத்திரம் சொல்லிக்கொண்டிருந்தால் உனக்கு யாதொரு நன்மையும் ஏற்படாது. >>>>>> வஞ்சனையால் பெரும்பணி எதையும் சாதித்து விட முடியாது. அன்பாலும் உண்மையான ஆற்றலாலும் தான் அரும் பெரும் சாதனைகள் நிறைவேறுகின்றன. >>>>>>>நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று தன்னம்பிக்கையுடன் இருங்கள், அவ்வாறு நீங்கள் உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகி விடும். >>>>>>அன்பிருக்கிறதா உங்களிடம்? உங்களால் ஆகாத காரியம் ஒன்றுமே இல்லை. >>>>>>>இன்னும் செய்யவேண்டிய வேலைகளையெல்லாம் செய்ய ஆற்றல் பெற வேண்டுமா? முதலில் பொறாமையை ஒழியுங்கள்.>>>>>>துடுப்பைப் போடுங்கள், அதனால் ஏற்பட்டக் களைப்பிற்கு ஓய்வெடுங்கள். போட்ட துடுப்பினால் விளைந்த வேகம் படகைக் கரை சேர்த்துவிடும்.>>>>>>>>என்னால் இந்தச் செயலை செய்து முடிக்க முடியும் என்றே நீங்கள் எப்போதும் நினைக்க வேண்டும். இந்தச் செயலை என்னால் முடியாது என்ற எண்ணமே உங்கள் உள்ளத்தில் எழக்கூடாது.>>>>>>>எதையும் பரபரப்புடன் இயற்றுதல் கூடாது. தூய்மை, பொறுமை, விடா முயற்சி இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்.>>>>>>>>எவனது நெஞ்சு ஏழைகளுக்காக துயரில் ஆழ்ந்திருக்குமோ அவனையே மகாத்மா என்பேன், அப்படி இல்லாதவன் துராத்மாவே.
`

Saturday, July 5, 2014

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்


ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள்இ 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். 'கடவுள் ஒருவரேஇ வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல வழிகள்' என்பதை தெளிவுபடுத்திஇ இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியாய் திகழ்ந்தவர். இந்தியாவின் ஆன்மீகப் பேரொளியைஇ அமெரிக்காஇ ஐரோப்பா எனப் பிறநாடுகளுக்கும் கொண்டுசென்றுஇ வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பிய சுவாமி விவேகானந்தரை இவ்வுலகிற்குத் தந்தவர்.
அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே
என்பதைத் தன் அனுபவத்தின் மூலமாக உணர்ந்துஇ அதையே வலியுறுத்திய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஆன்மீகச் சிந்தனைகளை விரிவாகக் காண்போம்.


பிறப்பு: பிப்ரவரி 18இ 1836

இடம்: காமர்புகூர்இ மேற்குவங்கம் மாநிலம்இ இந்தியா

இறப்பு: ஆகஸ்ட் 16இ 1886

தொழில்: ஆன்மீகவாதிஇ துறவி

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

'ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்' என அறியப்படும் காதாதர் சாட்டர்ஜி அவர்கள்இ 1836  ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18  ஆம் நாள்இ இந்தியாவின் மேற்குவங்காளம் மாநிலத்தில் ஹூக்லி மாவட்டதிலுள்ள 'காமர்புகூர்' என்ற இடத்தில் 'குதிராம்' என்பவருக்கும்இ தாயார் 'சந்திரமணி தேவிக்கும்' நான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவர் ஒரு பிராமணக் குடும்பத்தைச் சார்ந்தவர்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

சிறுவயதில்இ ஆடல் பாடல்களிலும்இ தெய்வங்களின் படங்கள் வரைவதிலும்இ களிமண்ணில் சிலைகள் செய்வதிலும் ஆர்வமாயிருந்த ஸ்ரீ ராமகிருஷ்ணருக்குஇ கல்வி பயில்வதில் ஆர்வம் இல்லை. மேலும்இ ராமகிருஷ்ணரின் குடும்பம் மிகவும் ஏழ்மையில் இருந்ததால்இ தன்னுடைய 17 வயதில் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலைக் காரணமாகஇ தமது அண்ணன் வசித்து வந்த கல்கத்தாவிற்கு வேலைத் தேடி சென்றார். அங்குஇ அவருடைய அண்ணன் ராஜ்குமார்இ தட்சினேஸ்வர் காளி கோயிலில் ஒரு புரோகிதராக வேலைப் பார்த்து வந்தார். சிறிதுகாலம் தன்னுடைய அண்ணனுக்கு உதவியாக அங்கேயே தங்கி வேலைப்பார்த்து வந்த ராமகிருஷ்ணர்இ ராஜ்குமார் இறந்தவுடன் காளி கோயிலின் பூசாரியானார்.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆன்மீகப் பயணம்

தட்சினேஸ்வர் காளி கோயிலில் தினந்தோறும் பூஜை செய்துவந்த ராமகிருஷ்ணருக்குஇ அவ்வப்போது பல சந்தேகங்கள் எழுவதுண்டுஇ 'தாம் கல்லைத்தான் பூஜை செய்கிறோமா கடவுள் என்று' நினைத்த அவர்இ 'காளி கடவுளாக இருந்தால்இ தனக்குக் காட்சி அளிக்குமாறு தினமும் பிரார்த்தனைகளையும்இ தியானமும் செய்தார். எனினும் தன்னுடைய முயற்சிக்கு பலனில்லை என்பதை உணர்ந்த அவர்இ காளியின் கையில் இருந்த வாளினால் தன்னைத்தானே கொல்ல முயற்சித்தார். அத்தருணத்தில்இ தன்னுடைய சுயநினைவை இழந்ததாகவும்இ ஒரு பேரானந்த ஒளி அவரை ஆட்கொண்டதாகவும்இ பின்னர் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வுக்குப் பிறகுஇ ராமகிருஷ்ணரின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தெரிந்தது. இவருடைய நடவடிக்கைகளைக் கண்ட ராமகிருஷ்ணரின் பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்தனர். அதன் விளைவாக காமர்புகூர் அருகில் உள்ள ஜெயராம்பாடி என்ற ஊரில் சாரதாமணி என்ற பெண் தனக்காக பிறந்ததாகவும்இ அப்பெண்ணே தன்னை மணம் புரிய பிறந்தவள் என்று கூறிஇ அவரையே திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும்இ பக்திஇ ஆன்மீக மார்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு விளங்கிய ஸ்ரீ ராமகிருஷ்ணர்இ  தாம்பத்தியம் ஏற்காமல் மனைவியைத் தாயாக மதித்துஇ தெய்வீக வாழ்வு நடத்தினார்.

பைரவி பிரம்மணி என்ற குருமாதாவிடம் தாந்ரிகம் கற்றுத் தேர்ந்த அவர்இ பின்னர் தோதா புரி என்பவரிடம் அத்வைத வேதாந்தத்தைக் கற்றார். இந்திய நாட்டினர் மற்றும் இந்து மதத்தினர் என்றில்லாமல்இ மனித இனம் முழுமைக்கும் ஒரு ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்ந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணர் வேதாந்த உண்மைகளைக் கண்டறிந்தவர் மட்டுமல்லஇ பிறருக்கு அதை உணர்த்துவதிலும் வல்லமைப் படைத்தவராக விளங்கினார். பாமரர் முதல் பண்டிதர் வரை அனைவரின் மனத்திலும் ஆன்மீக விளக்கெரிய தூண்டுதலாக அமைந்தார். இவரின் ஆன்மீகச் சிந்தனை உலகெங்கும் பரவிஇ அவதாரப் புருஷர் என்று அனைவராலும் போற்றப்பட்டார். மேலும்இ பலர் நாடி வந்து சீடர்களானார்கள். இவர்களுள் நரேந்தரநாத் தத்தா எனப்பட்ட சுவாமி விவேகானந்தர் குறிப்பிடத்தக்கவர். மேலும்இ ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் இறப்புக்குப் பிறகுஇ சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்ட ராமகிருஷ்ண மடம்இ இன்றளவும் ஆன்மீக வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகிறது.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிந்தனைத் துளிகள்

ஒருவன் வாழ்வில் இறைவன் அருளைப் பரிபூரணமாகப் பெற்ற பின்னரேஇ பிறருக்கு போதனை செய்ய முன்வர வேண்டும். அப்பொழுது தான் அது நல்ல பயனைப் பிறருக்குத் தரும்.
இல்லற வாழ்வில் இருந்தாலும்இ இறையருள் பெற விரும்புபவர்கள் அவ்வப்போது தனிமையைத் நாடிச் சென்று இறைவனுக்காக ஏங்கி அழவேண்டும்.
உலக வாழ்வில் ஈடுபட்டாலும்இ இறைவனே நமக்கு சொந்தமானவன் என்னும் உள்ள உறுதியோடு வாழ வேண்டும்.
சிலருடைய உள்ளம் கல்சுவர் போல உறுதியாக இருக்கும்இ அதில் ஆணி அடித்தால் அது வளைந்து போகும். அதுபோல எவ்வளவு முயன்றாலும் அவர்களுக்கு ஆன்மீக விஷயம் எதுவும் உள்ளே போகாது.
மக்களுள் பெரும்பாலோர் புகழுக்காகவோஇ புண்ணியத்தைத் தேடும் பொருட்டோ பரோபகாரம் செய்கின்றனர். அத்தகைய சேவைகள் யாவும் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டவை
இறுதி வாழ்க்கை

தாம் கற்றறிந்த உண்மைகளை மக்களுக்கு போதித்தது மட்டுமல்லாமல்இ எப்படி பக்தியோடு இருப்பது என்றும்இ அவற்றைத் தானும் கடைபிடித்து வாழ்ந்துக்காட்டிய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்இ இறுதி நாட்களில் தொண்டை புற்றுநோயால் அவதியுற்றார். அவருடைய சீடர்கள் அவரை கல்கத்தாவிலுள்ள காசிப்பூர் என்ற இடத்தில் வைத்து வைத்தியம் செய்தனர். இருந்தாலும்இ 1886 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று அவர் உடலை விட்டுஇ உயிர் பிரிந்தது.

உலக நன்மைக்காகவும்இ ஆன்ம விடுதலைக்காகவும் துறவறம் பூண்ட ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள்இ இந்தியாவில் வாழ்ந்த 'ஒப்பற்ற மனித தெய்வம்' ஆவார். இயற்கைப் பேரறிவும்இ செயற்கைப் பேரறிவும் ஒருங்கே பெற்ற அவர்இ இன்று உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள்இ ஆத்மார்த்தமாக வணங்கும் ஆன்மீக குருவாக விளங்கிக் கொண்டிருக்கிறார் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.


No comments:

Post a Comment